Search This Blog

Tuesday, November 2, 2010

முட்டாள் கேள்வி 3

இந்த ஒற்றை வரி
உனது குரலை
எனது வெடிச்சிரிப்பை
நட்சத்திரத்தை
ஏன் நினைவூட்டுகிறது என்று
நான் எண்ணிக்கொண்டிருக்கையில்,
யாரையாவது அழைத்து பேச வேண்டும்,
அல்லது ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்ப வேண்டுமென
விடாமல் தோன்றிகொண்டிருந்தும்,
நான் என் கைகளை ஏன் விடுவிக்கவேயில்லை?

உன்னிடம் கூறியிருந்தால்
இந்த நொடியை
தலையணை போல தழுவியிருந்திருப்பாயா
சிறு பந்தென உதைத்திருப்பாயா
பொம்மையென கடாசி எறிந்திரிப்பாயா
அல்லது வழக்கம் போல
இயல்பாக சிரிக்க முயற்சித்திருப்பாயா?

இது மோசமான கவிதை
அல்லது
இது ஒரு குப்பை என்று
யார் எனக்கு சொல்லி புரியவைப்பீர்கள்?

எப்போதிருந்து மூச்சுமுட்டுவது எனக்கு ஒரு
போதையாகிப் போனது?


இந்த பின்னிரவு என்னை
வெறித்து நோக்கும் பொழுதில்
என் கைகள்
நடுங்கத்துவங்குகிறது.

இந்த வரிகளை இப்படியே விட்டு விடுவதா
அல்லது
முலாம் பூசி கவிதையாக
விற்று விடுவதா?

No comments:

Post a Comment