Search This Blog

Tuesday, November 2, 2010

முட்டாள் கேள்வி 1

அந்தரத்தில் விழுவது
ஒரு மேகம் கலைவதை போல
ஒரு சலனமற்ற நதியில்
மூழ்கிப் போவதை போல
சன்னல் திரையை மெதுவாக
விலக்குவது போல
அமைதியாக இருக்கும் போதினும்,
ஏன்
ஏன் கைகள் தீராமல்
தேடிக்கொண்டிருக்கின்றன
ஒரு கயிற்றை.
அது என்னை நிரந்தரமாக கட்டிப்போடலாமென தெரிந்தும்,
அது தூக்குக்கயிராக  மாறுவதன்
சாத்தியத்தை
உணர்ந்த பின்பும். 

No comments:

Post a Comment